
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெற்று ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து மோசமாக இந்த தொடரை தொடங்கியது.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக திகழும் ஆஸ்திரேலிய அணி இப்படி உலக கோப்பையை மோசமாக துவங்கியதில் ரசிகர்களுக்கு மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் அதனை தொடர்ந்து நடைபெற்ற இலங்கை, பாகிஸ்தான், நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து என அடுத்த அடுத்த நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலிய அணி நான்காவது இடத்தில் இருக்கிறது.
இந்நிலையில் இந்த தொடரில் அடுத்ததாக ஆஸ்திரேலிய அணி நவம்பர் 4ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அகமதாபாத் நகரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் அவர்களது அரையிறுதி வாய்ப்பு மேலும் பிரகாசம் அடையும் என்பதால் இந்த போட்டி முக்கியமான ஒரு போட்டியாக பார்க்கப்படுகிறது.