
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி பேஸ்பால் கிரிக்கெட் எனும் புதிய அணுகுமுறையை கையில் எடுத்து அதிரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. பிராண்டன் மேக்கல்லம் – பென் ஸ்டோக்ஸ் கூட்டணி தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து என வரிசையாக முன்னணி அணிகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி இந்த அணுகுமுறையை சரி என்று காட்டி வருகிறது.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட் என்றால் மந்தமாக இருக்கும். ஐந்து நாள் முழுவதும் யார் கண்டுகளிப்பார்கள்? என்று இருந்த நிலையை ஓரளவிற்கு மாற்றி போட்டியின் முதல் நாளில் இருந்தே பார்த்து ரசிக்கும் அளவிற்கு விளையாடி வருகின்றனர்.தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆசஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், பேஸ்பால் அணுகுமுறையை வெளிப்படுத்தி முதல் இன்னிங்ஸில் முதல்நாள் முடிவதற்குள்ளேயே 393 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.
ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 386 அடித்துவிட்டது. பின்னர் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியை 273 ரன்கள் கட்டுப்படுத்தி, 281 ரன்கள் இலக்கை சேஸ் செய்தது. எட்டு விக்கெட்டுகள் பறிபோனபோதும், ஒன்பதாவது விக்கெட்டுக்கு கம்மின்ஸ் மற்றும் லையன் இருவரும் சேர்ந்து இங்கிலாந்து அணியை வீழ்த்தி பேஸ்பால் கிரிக்கெட்டை கேள்விக்கு உள்ளாகியுள்ளது.