Advertisement
Advertisement
Advertisement

சென்னை வெற்றி பெற வேண்டும் என்று என் இதயம் விரும்புகிறது - சுனில் கவாஸ்கர்!

ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்து கவாஸ்கர் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வெல்ல வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தி வந்தார். தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் வெளியேறி இருப்பதால், அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 28, 2023 • 15:44 PM
Mind says GT will be champions, heart beats for CSK, says Sunil Gavaskar!
Mind says GT will be champions, heart beats for CSK, says Sunil Gavaskar! (Image Source: Google)
Advertisement

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானத்தில் 16ஆவது ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற இருக்கிறது. லீக் சுற்றில் முடிவில் 10 வெற்றிகள் உடன் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது. எட்டு வெற்றி மற்றும் ஒரு ட்ராவுடன் 17 புள்ளிகள் பெற்று ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தைச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிடித்தது. 

இறுதிப் போட்டிக்கான முதல் தகுதி சுற்று போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிச் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு குஜராத் டைட்டன்ஸ் தகுதி பெற்றது. 

Trending


இந்தத் தொடரின் ஆரம்பத்தில் இருந்து கவாஸ்கர் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வெல்ல வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தி வந்தார். தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் வெளியேறி இருப்பதால், அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள கவாஸ்கர், “சென்னை சூப்பர் கிங்ஸ் எனக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்து எப்பொழுதும் விருப்பமான அணியாகும். சென்னை வெற்றி பெற வேண்டும் என்று என் இதயம் விரும்புகிறது. ஏனென்றால் தோனி இன்னொரு முறை வெல்வது அற்புதமான ஒன்றாக இருக்கும். அவரது பதட்டமில்லாத அமைதியான நடவடிக்கைகள் இதில் வித்தியாசத்தை உருவாக்கும்.

இன்னொரு பக்கம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அற்புதமான துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் மற்றும் கேப்டனாக ஹர்திக் பாண்டியா கிடைத்திருக்கிறார்கள். ஸ்கோர் போர்டில் ரன்களை போட வேண்டும். பந்துவீச்சாளர்கள் போட்டிகளை வெல்வார்கள் என்று பலரும் சொல்வார்கள். ஆனால் அவர்கள் பந்து வீசுவதற்குத் தகுந்த ரன்கள் ஸ்கோர் போர்டில் இருந்தால்தான் அவர்களால் போட்டியைக் காக்க முடியும்.

இந்த இடத்தில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இரண்டு அணிகளும் சிறப்பாக இருக்கிறது. இந்த இரண்டு அணியிலும் பேட்ஸ்மேன்களும் பங்களிக்கிறார்கள் பந்துவீச்சாளர்களும் பங்களிக்கிறார்கள். இது மிகவும் நல்ல கலவை. இதனால்தான் இவர்கள் முதல் இரண்டு அணியாக இருக்கிறார்கள்; இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement