
Minister Manoj Tiwary hits ton, Bengal make Ranji Trophy semis (Image Source: Google)
அபிமன்யு ஈஸ்வரன் தலைமையில் இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடி வரும் பெங்கால் அணி இதுவரை ஓர் ஆட்டத்திலும் தோற்கவில்லை.
காலிறுதிச் சுற்றில் நான்காம் நாளன்று மூன்று ஆட்டங்களின் முடிவு தெரிந்த நிலையில் பெங்கால் - ஜார்கண்ட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 5ஆம் நாளுக்குச் சென்றது.
உத்தரகண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பைக் காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணி, 725 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. கர்நாடகத்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தை உத்தரப் பிரதேச அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பஞ்சாப் அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தை மத்தியப் பிரதேச அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.