
MI's Trent Boult Writes An Emotional Post For India After Reaching New Zealand (Image Source: Google)
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தினந்தோறும் 4 லட்சம் பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுகின்றனர்.
தொடர்ந்த கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தங்களது வீடுகளுக்கும் நாடுகளுக்கும் திரும்பியுள்ளனர். இன்றைய தினம் ஒரு சில வெளிநாட்டு வீரர்கள் தங்களது நாடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவின் தற்போதைய நிலை மாறி இயல்புநிலை திரும்பும் என்று நியூசிலாந்து வேகப்புயல் ட்ரெண்ட் போல்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் இன்றைய தினம் ஆக்லாந்திற்கு திரும்பியுள்ளார்.