
அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரானது இன்றுடன் நிறைவடைந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் - எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூயார்க் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சியாட்டில் அணிக்கு தொடக்க வீரர் குயின்டன் டி காக் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் அதேசமயம் மறுபக்கம் நௌமன் அன்வர் 9, ஜெயசூர்யா 16, ஹென்ரிச் கிளாசென் 4, ஷுபம் 29 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த டி காக் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 87 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சியாட்டில் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்திருந்தது. நியூயார்க் தரப்பில் டிரெண்ட் போல்ட், ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.