
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் ஐபிஎல்லின் ஆல்டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல்லின் ஆல்டைம் சிறந்த லெவன் அணியின் தொடக்க வீரர்களாக அதிரடி மன்னர்கள் ரோஹித் சர்மா மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் கைஃப். இவர்கள் இருவரையும் தவிர அந்த இடத்தில் வேறு இருவரை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அதேபோலத்தான் 3ம் வரிசை வீரரும்.. 3ம் வரிசையில் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார் கைஃப்.
4ஆம் வரிசை வீரராக, மிஸ்டர் ஐபிஎல் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட, ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரரான சுரேஷ் ரெய்னாவையும், 5ஆம் வரிசையில் டிவில்லியர்ஸையும் தேர்வு செய்துள்ள கைஃப், விக்கெட் கீப்பர் - ஃபினிஷராக தோனியை தேர்வு செய்து, அவரையே ஐபிஎல் ஆல்டைம் லெவனின் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார்.