
ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 70 லீக் போட்டிகள், பிளே ஆஃப் சுற்றுகள் நடந்து முடிந்து இறுதிப் போட்டி மட்டுமே எஞ்சியிருக்கிறது. இன்று இரவு அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் குஜராத் டைடன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த 15ஆவது சீசன் கடந்த சீசன்களைவிட, முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.
காரணம் இந்த சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்பு, ஒரு அணி 4 வீரர்கள் வரை மட்டுமே தக்கவைக்க அனுமதிக்கப்பட்டது. இதனால், பல வீரர்கள் அணி மாறி விளையாடும் நிலை ஏற்பட்டது. பல ஆண்டுகளாக சன் ரைசர்ஸ் அணிக்கு விளையாடி வந்த வார்னர், டெல்லி அணிக்கு இடமாறினார். இப்படி பல நட்சத்திர வீரர்கள் அணி மாறினர்.
இதனால் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய ஸ்டார் அணிகள், முக்கிய வீரர்களை இழந்து தடுமாறியது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து கடைசி இரண்டு இடங்களையும் பிடித்தது. மேலும் புதிதாக வந்த லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் அபாரமாக செயல்பட்டு தொடர்ந்து புள்ளிப் பட்டியலின் டாப்பில் நீடித்து வந்தன.