
T20I Tri Series: ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் முகமது நவாஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், முத்தரப்பு தொடரின் தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார்.
பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகள் யுஏஇ அணியுடன் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்த முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்னேறியுள்ளன. நேற்று ஷார்ஜாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர் சாகிப்சதா ஃபர்ஹான் ரன்கள் ஏதுமின்றியும், சைம் அயுப் 19 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் களமிறங்கிய ஃபகர் ஸமான்-கேப்டன் சல்மான் ஆகா இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் ஸமான் 27 ரன்னிலும், சல்மான் ஆகா 24 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹசன் நவாஸ் 15 ரன்னிலும், முகமது ஹாரிஸ் 2 ரன்னிலும், முகமது நவாஸ் 25 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் கேப்டன் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.