
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த வருடத்திலிருந்து ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தங்களுடைய கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 2013 – 2023 வரையிலான காலகட்டங்களில் 5 கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்த ரோஹித் சர்மா மும்பையை வெற்றிகரமான அணியாக மாற்றினார்.
இருப்பினும் அந்த நன்றியை மறந்த மும்பை நிர்வாகம் அவரை கழற்றி விட்டது அந்த அணி ரசிகர்களிடமே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மறுபுறம் 2016 முதல் 2021 வரை மும்பை அணியில் வளர்க்கப்பட்டு இந்தியாவுக்காக அறிமுகமான ஹர்திக் பாண்டியா முக்கிய வீரராக உருவெடுத்தார். இருப்பினும் அவரை 2022 சீசனில் மும்பை கழற்றி விட்ட போது 15 கோடி கொடுத்து வாங்கிய குஜராத் நிர்வாகம் கேப்டனாகவும் அறிவித்தது.
அந்த வாய்ப்பில் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியா 2ஆவது வருடம் குஜராத்தை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். இதனால் தன்னுடைய சொந்த மாநிலமான குஜராத்துக்கு கடைசி வரை அவர் கேப்டனாக இருப்பார் என்று அனைவரும் நம்பினர். இருப்பினும் சற்று அதிகமாக பணம் கிடைக்கும் என்பதற்காக தம்மை கேப்டனாக உருவாக்கிய குஜராத்தையும் சொந்த மாநிலத்தையும் மறந்த பாண்டியா தற்போது மும்பையை வழி நடத்த உள்ளார்.