1-mdl.jpg)
நடப்பு உலகக் கோப்பை தொடரில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிபெறும் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இரவில் பனிப்பொழிவு இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இந்திய அணி இப்படியான முடிவை எடுத்திருக்கிறது.
இந்திய அணியின் தரப்பில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த ஷுப்மன் கில் அணியில் இடம் பிடித்து இருக்கிறார். இஷான் கிஷான் வெளியேற்றப்பட்டு ஸ்ரேயாஸ் தொடர்கிறார். முகமது ஷமி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. பாகிஸ்தான் தரப்பில் எந்த மாற்றங்களும் கடந்த ஆட்டத்தில் இருந்து செய்யப்படவில்லை.
இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமான ஒன்றாக காணப்படுகிறது. ஆடுகளத்தில் புற்கள் ஏதும் இல்லை. மேலும் பந்தும் பெரிய அளவில் சுழலவில்லை. பவுன்சரும் குறைவாக இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்களாக இமாம் உல் ஹக் மற்றும் அப்துல்லா ஷஃபிக் இருவரும் சிரமம் இல்லாமல் விளையாட ஆரம்பித்தார்கள். பும்ரா ஒரு முனையில் கட்டுப்பாடாக வீச, இன்னொரு முனையில் சிராஜ் முதல் ஓவரிலேயே மூன்று பவுண்டரிகள் கொடுத்தார்.