Advertisement

ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எம் எஸ் தோனி!

சக சிஎஸ்கே அணி வீரர்களுடன் இணைந்து மகேந்திர சிங் தோனியும் சண்டிகர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் காணொளி வைரலாகி வருகிறது.

Advertisement
ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எம் எஸ் தோனி!
ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எம் எஸ் தோனி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 07, 2025 • 11:59 AM

ஐபிஎல் தொடரில் நேற்று முந்தினம் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தங்களுடைய சொந்த மண்ணில் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக படுதோல்வியைச் சந்தித்ததுடன், ரசிர்களின் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 07, 2025 • 11:59 AM

அதிலும் குறிப்பாக இப்போட்டியுடன் சிஎஸ்கேவின் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறவுள்ளதாகவும் வதந்திகள் பரவின. மேற்கொண்டு இப்போட்டியை காண மகேந்திர சிங் தோனியின் பேற்றோர்களும் மைதானத்திற்கு நேரில் வருகை தந்ததன் காரணமாக இத்தகவல் உண்மை என்றும் கூறப்பட்டது. ஏனெனில் அவரின் பேற்றொர்கள் இதுவரை எந்தவொரு போட்டியின் போதும் மைதானத்திற்கு வருகை தந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Trending

இருப்பினும், போட்டிக்குப் பிறகு, தோனி தனது ஓய்வு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும், தோனியின் ஓய்வு முடிவு குறித்து சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கும் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் மகேந்திர சிங் தோனியும் நடப்பு ஐபிஎல் தொடருக்கு பிறகு தான் தனது ஓய்வு முடிவு குறித்து யோசிப்பதாகவும், அதற்கு இன்னும் 12 மாத அவகாசம் இருப்பதாகவும் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

இநிந்லையில் இப்போது தோனியின் ஓய்வு செய்தியை மறுக்கும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதன்படி அக்காணொளியில் சக சிஎஸ்கே அணி வீரர்களுடன் இணைந்து மகேந்திர சிங் தோனியும் சண்டிகர் விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதைக் காண முடிந்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி விளையாடுவது ஏறத்தாள உறுதியாகியுள்ளது. 

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளைய தினம் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், இப்போட்டியில் வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர். 

Also Read: Funding To Save Test Cricket

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீஷா பதிரானா, நூர் அகமது, ரவிச்சந்திரன் அஸ்வின், டெவோன் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சாம் கரன், ஷேக் ரஷித், அன்ஷுல் கம்போஜ், முகேஷ் சௌத்ரி, தீபக் ஹூடா, குர்ஜன்பிரீத் சிங், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணன் கோஷ், ஸ்ரேயாஸ் கோபால், வான்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement