
இந்தியாவில் புகழ்பெற்ற டி20 லீக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் 2024ஆம் ஆண்டிற்கான 17ஆவது சீசனானது வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலமும் துபாயில் கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. அந்த ஏலத்தில் பங்கேற்ற அணிகளும் போட்டி போட்டு தங்களது அணிக்கு தேவையான வீரரகளை தேர்வு செய்தது.
இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாட இருக்கும் சிஎஸ்கே அணி இம்முறையும் கோப்பையை வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏனெனில் தற்போது 42 வயது எட்டியுள்ள சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இதுவே கடைசி சீனாக இருக்கும்.
ஏனெனில் அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற இருப்பதால் நிச்சயம் தோனி இந்த ஆண்டுடன் ஓய்வை அறிவித்து விடுவார் என்பதனால் இந்த ஆண்டு சென்னை அணி வெற்றியுடன் தோனியை வழி அனுப்ப வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதே வேளையில் தோனியும் ரசிகர்களின் அன்புக்காகவும், பாசத்திற்காகவும் தான் இந்த ஆண்டு விளையாடுவேன் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.