
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தங்களது சொந்த மைதானத்தில் விளையாடிய இரண்டு போட்டிகளைத் தவிர மற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. அதேசமயம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று தங்களது வெற்றி கணக்கைத் தொடரும் வகையில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டுவரும் கௌதம் கம்பீர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து பேசியுள்ள கருத்து தற்போது ரசிகர்களை அச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.