
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் நாளை மறுநாள் மஹாராஷ்டிராவில் கோலமாக தொடங்கவுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்பதனால், 74 போட்டிகளைக் கொண்ட பிரம்மாண்ட கிரிக்கெட் தொடராக நடைபெறவுள்ளது.
மேலும் இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதப்படி நாளை மறுநாள் தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா செயல்படுவார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.