
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. மும்பையின் வான்கடேவில் 11 முறை விளையாடியுள்ள சி எஸ் கே தற்போது நான்காவது வெற்றியை பெற்றிருக்கிறது. இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ரஹானே, தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த நிலையில் சிஎஸ்கேவுக்கு வந்த பிறகு வீரர்கள் எப்படி சிறப்பாக செயல்படுகிறார்கள் என வர்ணனையாளர்கள் பாராட்டி பேசினர்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய தோனி, “மும்பைக்கு எதிரானது வெற்றி மகிழ்ச்சியை தருகிறது. ஏனென்றால் நாங்கள் தீபக் சஹாரை முதல் ஓவரிலேயே காயத்தால் இழந்து விட்டோம் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். அவர்தான் எங்களது பவர் பிளேவில் பந்து வீசும் பவுலர். தென் ஆப்பிரிக்கா வீரர் சிசான்டா மஹாலா தன்னுடைய முதல் ஆட்டத்தில் விளையாடுகிறார். இதனால் யாருக்கு எந்த ஓவரை கொடுப்பது என்ற சவால் எனக்கு இருந்தது.
நல்ல வேலையாக சுழற் பந்துவீச்சாளர்கள் இன்று சிறப்பாக செயல்பட்டனர். ஏழு ஓவர்கள் கடந்த பிறகு ஆடுகளத்தின் பவுன்சில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டது. பந்து கொஞ்சம் திரும்பியது போல் தெரிந்தது. இதனால் நான் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பை கொடுத்தேன். எங்களுடைய பந்துவீச்சாளர்கள் முதலில் ரன்கள் கொடுத்தாலும், பிறகு ரன்களை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டனர்.