
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களைச் சேர்த்தது. அதன்படி இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரச்சின் ரவீந்திரா, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் இணைந்த அஜிங்கிய ரஹானே - ரவீந்திர ஜடேஜா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அஜிங்கியா ரஹானே 36 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபே, சமீர் ரிஸ்வி ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய மொயீன் அலியும் 30 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 57 ரன்களையும், மகேந்திர சிங் தோனி 3 பவுண்ட்ரி, 2 சிக்ஸர்கள் என 28 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான் ரன்களைச் சேர்த்தனர். இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் கேஎல் ரகுல் - குயின்டன் டி காக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.