
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது. இத்தொடரில் விளையாடை 7 போட்டிகளில் சிஎஸ்கே 5 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 2 ஆம் இடத்தையும் பிடித்து அசத்தியது.
இந்தாண்டு பேட்டிங் மற்றும் பவுலிங் என யாரும் எதிர்பார்க்காத ஃபார்மில் சிஎஸ்கே உள்ளது. ஓப்பனிங்கில் முதல் சில போட்டிகளில் சொதப்பி வந்த ருத்ராஜ் கெய்க்வாட் தற்போது நல்ல ஃபார்மில் உள்ளார். அவருடன் டூப்ளசிஸ் அதிரடி காட்டுகிறார். அதே போல் 3வது வீரராக மொயின் அலியை பயன்படுத்தியது பெரும் நன்மையை கொடுத்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல் சுரேஷ் ரெய்னாவின் கம்பேக் அணிக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரை ஜடேஜா, தீபக் சஹார் என மிகச்சிறப்பாக உள்ளது.
அணி வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் கேப்டன் தோனி மட்டும் இன்னும் திணறி வருவது ரசிகர்களுக்கு வருத்தமாக உள்ளது. இந்தாண்டு 7 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 37 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவர் ஆட்டத்தின் கடைசியில் இறங்கினாலும், அதிரடி காட்டிவிட்டு செல்வார். ஆனால் இந்தாண்டு அவரின் பேட்டிங்கில் பெரியளவில் அதிரடி தெரியவில்லை.