
பிரபல சமூக வலைதளப்பக்காமான ட்விட்டர் தனது வாடிக்கையாளரின் பக்கத்தின் உண்மைத்தன்மையை சோதித்து அங்கீகரித்துவிட்டால் அதற்காக 'வெரிஃபைட் டிக்' வழங்குகிறது. ப்ளூ பேட்ஜ் என்றழைக்கப்படும் இந்த நீல நிற டிக் வழங்கப்படுகிறது.
பெரும்பாலும் அரசியல் தலைவர்கள், நாட்டின் பிரதமர், அதிபர் போன்றோர், உயரதிகாரிகள், சினிமா, விளையாட்டுத் துறை பிரபலங்கள் போன்றோர் தங்களின் ட்விட்டர் கணக்கை வெரிஃபைட் செய்து கொள்கின்றனர். பிரபலங்கள் பெயரின் மூலம் போலி கணக்கை உருவாக்கி அதில் சர்சைக்குரிய, அவதூறு கருத்துகளை யாரேனும் வெளியிடுவதிலிருந்து தற்காத்துக் கொள்ள இந்த ப்ளூ பேட்ஜ் உதவுகிறது.
ஆனால், இந்த ப்ளூ டிக் வசதி பெற்றவர்களின் அவர்தம் கணக்கை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் ட்விட்டர் அவர்களது ப்ளூ பேட்ஜை நீக்கிவிடுகிறது. இது ட்விட்டர் நிறுவனத்தின் விதிமுறையாக உள்ளது.