
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியது முதலே சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இருப்பினும், அவர் களமிறங்கிய போட்டிகளில் அனைத்திலும் அணியின் வெற்றிக்கு உதவும் வகையில் சிறப்பாக பேட் செய்துள்ளார்.
இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கேப்டன் தோனி தாமதமாக பேட்டிங் செய்ய வருவதற்கு அவரது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயமே காரணம் என தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து பேசிய அவர், “மகேந்திர சிங் தோனி ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் விளையாடுவதையே விரும்புவதாக நான் நினைக்கிறேன். அதுதான் அவருடைய திட்டமாக இருக்கும். அவரது முழங்கால் 100 சதவிகிதம் சரியாக இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் தன்னுடைய முழங்கால் காயத்துடன் அணிக்கு எந்த அளவில் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியுமோ அந்த அளவுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்.