
சர்வதேச இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக இருந்து வந்த ரஹானே, லிமிடெட் ஓவர் போட்டிகளுக்கு 2018ஆம் ஆண்டிற்கு பிறகு எடுக்கப்படவில்லை. பின்னர் டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டு, மொத்தமாக டெஸ்ட் அணியில் இருந்தும் ஓராண்டாக நீக்கப்பட்டார். உள்ளூர் போட்டிகளில், சையது முஸ்தக் அலி தொடரில் படுமோசமாக செயல்பட்டார். ரஞ்சிக்கோப்பை தொடரில் இரட்டை சதம் மற்றும் சதம் விளாசி டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் பார்மிற்கு வந்தார்.
ரஹானே, உள்ளூர் டி20 தொடர்களில் எதிர்பார்த்தவாறு செயல்படாததால் கடந்த டிசம்பர் மாதம் அணியிலிருந்து நீக்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இருப்பினும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்ற ராகனேவை ஆரம்பவிலையான 50 லட்சம் ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி நிர்வாகம் எடுத்தது. இவரை எடுத்ததற்கு பல்வேறு விமர்சனங்களும் வந்தது.
இருப்பினும் ஒவ்வொரு சீசனிலும் இதுபோன்ற மூத்த வீரர்களை சிஎஸ்கே அணி நிர்வாகம் எடுப்பது வழக்கம். கடந்த சீசனில் புஜாரா கூட சிஎஸ்கே அணி எடுக்கப்பட்டார். ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாட வைக்கப்படவில்லை. அதுபோன்று ரஹானேவும் விளையாட வைக்கப்படமாட்டார் என்று கருதப்பட்டது.