
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் டைடன்ஸும், கடைசி இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸும் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் இஷான் கிஷனும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ரோஹித் சர்மா தொடக்கம் முதலே அடித்து ஆடி அரைசதத்தை நெருங்கிய நிலையில், 28 பந்தில் 43 ரன்களுக்கு ரஷீத்கானின் பந்தில் ஆட்டமிழந்தார்.
சூர்யகுமார் யாதவ் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸின் ஸ்கோர் வேகமாக உயர்ந்துகொண்டிருந்த நிலையில், பொல்லார்டு களத்திற்கு வந்த பின்னர் ரன் வேகம் குறைந்தது. மந்தமாக பேட்டிங் ஆடிய பொல்லார்டு 14 பந்தில் 4 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.