
Mumbai Indians beat Kolkata Knight Riders by 10 runs (Image Source: Google)
ஐபிஎல் 14ஆவது சீசனின் 5ஆவது லீக் போட்டி இன்று சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ஈயான் மோர்கன் பந்துவீசத் தீர்மானித்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
ஆனால் பின்னர் வந்த வீரர்கள் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களை மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி சேர்த்தது. கொல்கத்தா அணி தரப்பில் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஐந்து விக்கெட்டுக்களையும் கைப்பற்றி அசத்தினார்.