
தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் அனைத்து தரப்பு போட்டிகளிலும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். இதேபோன்று தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு பல்வேறு வெற்றிகளை பெற்று கொடுத்து வந்தார்.
இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய முரளி விஜய், பல்வேறு தொடர்களில் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்து தந்தார் . இந்த நிலையில் தமிழக வீரர் முரளி விஜய் டெஸ்ட் கிரிக்கெட் அணையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதன் பிறகு ஐபிஎல் போட்டியிலும் முரளி விஜய் சரிவர விளையாட வில்லை .
2020 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் விளையாடிய முரளி விஜய் சரிவர விளையாடததால் பிளேயிங் லெவனில் இடம்பெறாமல் இருந்தார். இதனை அடுத்து கிரிக்கெட் இருந்து சற்று விலகி இருந்த முரளி விஜய் தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிஎன்பிஎல் தொடர் மூலம் கிரிக்கெட்டுக்கு வந்துள்ளார். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்திய கிரிக்கெட்டில் கலக்கிய வருகிறார்.