
ஐபிஎல் 16ஆவது சீசனிங் ஏழாவது போட்டி இன்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் டாசில் வென்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா வழக்கம்போல் பந்துவீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணிக்கு கேப்டன் வார்னர் மற்றும் பிரிதிவி ஷா தொடக்க விரர்களாக வந்தார்கள்.
ஷார்ட் பந்தில் பலவீனம் உள்ள பிரிதிவி ஷா அப்படியான முகமது சமியின் பந்தில் வெளியேறினார். இதற்கு அடுத்து அந்த அணிக்கு 30 ரன்களை தொட்டது கேப்டன் வார்னர், சர்பராஸ் கான் மற்றும் அச்சர் படேல் மூவரும்தான். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 162 ரன்கள் 8 விக்கெட் இழந்து எடுத்தது. ரஷீத் கான் 31 ரன்கள் தந்து மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார்.
இதற்கு அடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களை அன்றிச் நோர்கியா கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் ஐந்து ரண்களில் வெளியேறினார்.