பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார் சந்தீப் லமீச்சானே!
பாலியல் வழக்கில் நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே இன்று நேபாள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
![Bharathi Kannan Bharathi Kannan](https://img.cricketnmore.com/uploads/2021/03/bk.jpg)
![Nepal Spinner Lamichhane Arrested At Kathmandu Airport After Rape Accusations Nepal Spinner Lamichhane Arrested At Kathmandu Airport After Rape Accusations](https://img.cricketnmore.com/uploads/2022/10/sandeep-arrested1-lg.jpg)
நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்தீப் லமிச்சேன். இவர் ஐபிஎல்லில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடியவர். லெக் ஸ்பின்னரான இவர் உலகின் பல்வேறு லீக் தொடர்களில் விளையாடிவருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது 17 வயது சிறுமி ஒருவர் இந்தப் புகாரை நேபாளின் கவுசாலா பெருநகர காவல் துறையிடம் அளித்துள்ளார். அவர் அளித்திருக்கும் புகாரில், “நான் சந்தீப்பின் தீவிர ரசிகை. அவருடன் வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் வழியே தொடர்புகொண்டு பேசுவது வழக்கம். என்னை சந்திக்க வேண்டும் என முதன்முதலில் அவரே என்னிடம் ஆவலுடன் கூறினார். அதனையடுத்து அவரை சந்தித்தபோது, என்னை 2 முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்” என கூறியுள்ளார்.
Trending
இந்த புகாரை தொடர்ந்து, அப்பெண்ணிற்கு மருத்துவமனை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசராணையும் மேற்கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவர் கடந்த மாதம் நேபாளத்தை விட்டு புறப்பட்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.சந்தீப் கரபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்று நாடு திரும்பப்படும் போது கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து நேபாளம் கிரிக்கெட் வாரியம் சந்தீப் லமிச்சனேவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. முழு விசாரணை முடியும் வரை அவரை பணியிடை நீக்கம் செய்தது. மேலும் இன்று காலை 10 மணியளவில் தான் நேபாளம் திரும்பி விடுவேன் என்றும் பாலியல் புகாரில் விசாரணையின் அனைத்து நிலைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க சட்டப் போராட்டம் நடத்துவேன் என்றும் கூறினார்.
அதன்படி, நேபாள அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே இன்று காலை காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். அதன் பின், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், அவர் உடனடியாக காவல்துறையால் கைது செய்யப்பட்டார். மேலும் சந்தீப் லாமிச்சானே காவல்துறையினர் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக நேபாள நடிகர் பால் ஷா, சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய விவகாரம் வெளிவந்த பின்னரே, சந்தீப் லமிச்சேனின் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த மே மாதம், பிரபல நேபாள பெண் மாடல் ஒருவர், தான் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட அனுபவத்தை டிக்டாக் செயலில் தொடர் வீடியோவாக வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என போராட்டம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now