
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நெதர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 181 ரன்களை குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக மைக்கேல் லெவிட் 55 ரன்களையும், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 27 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் தில்சன் மதுஷங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிஷங்கா 5 ரன்களிலும், மெண்டிஸ் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் 05 ரன்களுக்கும், சரித் அசலங்கா 12 ரன்களுக்கும், ஏஞ்சலோ மேத்யூஸ் 15 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் இணைந்த கேப்டன் வநிந்து ஹசரங்கா - தசுன் ஷனகா இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல முயற்சித்தனர்.