
New IPL Franchise Of Lucknow & Ahmedabad Will Target Warner, Rahul, Shreyas Iyer & Hardik Pandya Via (Image Source: Google)
இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்று சாதித்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான அடுத்த சீசனில் அகமதாபாத், லக்னோ ஆகிய இடங்களைக் கொண்டு இரு புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்களை தேர்வு செய்ய மெகா ஏலம் நடைபெறவுள்ளது.
இதில் பழைய எட்டு அணிகளும் தலா 4 வீரர்களையும், இரு புதிய அணி தலா 3 வீரர்களையும் தக்கவைக்கலாம் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் எந்தெந்த அணிகள் தங்கள் வீரர்களைத் தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.