
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களின் காயம் காரண்மாக பெரும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. முன்னதாக அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் ஐஎல்டி20 தொடரின் போது காயமடைந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் முத்தரப்பு தொடரின் போது ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவும் காயத்தை எதிர்கொண்டார். இதனால் இவர்கள் இத்தொடரில் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த இருவீரர்களின் உடற்தகுதி குறித்த அப்டேட்டை அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீவ் இன்று வழங்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “லாகூரில் ரச்சினுக்கு நெற்றியில் மோசமான அடி விழுந்தது தெளிவாகத் தெரிகிறது. மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், அவர் தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். எனவே, தற்போது நாங்கள் ஹச்ஐஏவின் நெறிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம்.