உலகக் கோப்பை தொடரில் ஆரம்பத்திலிருந்தே தடுமாறி வந்த இந்திய அணி சூப்பர் 12-இன் முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்த போட்டியில் நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் சரண்டர் ஆனது. பின்னர் சுதாரித்த இந்திய அணி குட்டி நாடுகளான ஆஃப்கன், ஸ்காட்லாந்தை துவம்சம் செய்து, ஃபார்முக்கு திரும்பியது.
இதன் அடிப்படையில் 4 போட்டிகளில் 2-இல் வெற்றி பெற்று 4 புள்ளிகள் மற்றும் +1.619 நெட் ரன் ரேட்டுடன் குரூப் 2 பிரிவில் 3ஃஃம் இடத்தில் உள்ளது.
குரூப் 1-இல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. குரூப் 2-இல் பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது. இந்த குரூப்பில் அரையிறுதிக்கு செல்லும் அடுத்த அணி என்பதில்தான் நியூசிலாந்து, இந்தியா, ஆஃப்கானிஸ்தான் இடையே போட்டி காணப்படுகிறது.