
டி20 உலகக் கோப்பை முடிந்துள்ள நிலையில், அடுத்து இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.நியூசிலாந்துக்கு சென்று, அங்கு இளம் இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், ஒருநாள் தொடர்களில் பங்கேற்க உள்ளது.
இதில் முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்தான நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறவுள்ளது. 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இந்திய அணியில் தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அதிகளவில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், அஸ்வின், முகமது ஷமி, தினேஷ் கார்த்திக் ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் படை களத்தில் குதிக்கிறது. சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், பந்த் போன்ற அதிரடி சூரர்கள் கவனத்தை ஈர்க்கிறார்கள்.