
இந்தியா தற்பொழுது தனது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் தோற்று இருந்த நிலையில் நேற்று இரண்டாவது போட்டியில் விளையாடியது. இந்த போட்டிக்கான டாஸில் இந்த முறை இந்திய அணி வென்று இருந்தது.
முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சில் தடுமாறி நிற்க, இளம் வீரர் திலக் வருமா சிறப்பாக விளையாடி 41 பந்துகளில் 51 ரன்கள் சேர்க்க, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இரண்டு விக்கெட்டுகள் இரண்டு ரன்களுக்கு விட்டது. இந்திய அணி அந்த இடத்திலிருந்து வேகம் பெற்று வென்று விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.
இப்படியான நிலையில் பேட்டிங் செய்ய வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றி வெஸ்ட் இண்டீஸ் பக்கம் திருப்பி விட்டார். இறுதிவரை களத்தில் நின்ற அவர் 40 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 67 ரன்கள் எடுத்தார். 18.5 ஓவரில் இலக்கை எட்டி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.