
'No Meeting Took Place': BCCI Clears The Air Regarding Kohli's Captaincy Future (Image Source: Google)
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மூன்று வடிவிலான இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வருகிறார். எனினும் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையையும் அவரால் வெல்ல முடியவில்லை.
இதனால் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு கேப்டன் பதவியிலிருந்து விலகி, பேட்டிங்கில் அவர் கவனம் செலுத்தவுள்ளதாகவும், ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படவுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின.
இது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனது. இந்நிலையில் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வதந்தியை பிசிசிஐ மறுத்துள்ளது.