Advertisement

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியே நீடிப்பார் - பிசிசிஐ!

டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் விராட் கோலி கேப்டன்சியை விடுவார் என தகவல்கள் வெளியான நிலையில், இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியே நீடிப்பார் என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 13, 2021 • 16:03 PM
'No Meeting Took Place': BCCI Clears The Air Regarding Kohli's Captaincy Future
'No Meeting Took Place': BCCI Clears The Air Regarding Kohli's Captaincy Future (Image Source: Google)
Advertisement

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மூன்று வடிவிலான இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வருகிறார். எனினும் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையையும் அவரால் வெல்ல முடியவில்லை. 

இதனால் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு கேப்டன் பதவியிலிருந்து விலகி, பேட்டிங்கில் அவர் கவனம் செலுத்தவுள்ளதாகவும், ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படவுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின. 

Trending


இது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனது. இந்நிலையில் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வதந்தியை பிசிசிஐ மறுத்துள்ளது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதுகுறித்து பிசிசிஐயின் பொருளாளர் அருண் துமால் கூறுகையில், “இவையெல்லாம் அபத்தமானவை. அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. ஊடகங்களில் மட்டுமே இவை விவாதிக்கப்பட்டு வருகின்றன. டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20 அணிகளுக்குத் தனித்தனி கேப்டன்களை நியமிப்பது பற்றி பிசிசிஐ விவாதிக்கவில்லை. எல்லாவிதமான போட்டிகளிலும் விராட் கோலியே கேப்டனாக நீடிப்பார்” என்று விளக்கம் அளித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement