
கிரிக்கெட் உலகில் ரசிகர்களால் 360 டிகிரி பேட்ஸ்மேன் என அன்போடு அழைக்கப்படுபவர் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டி வில்லியர்ஸ். கடந்த 2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இவர், ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் அப்போது முதலே அவரது ஓய்வு முடிவை கைவிடுத்து மீண்டும் சர்வதேச களத்திற்கு தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாட வர வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அவரது ரசிகர்கள், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களும் டி வில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
அதற்கு காரணம் அவரது ஆட்டம் மற்றும் ஃபிட்னெஸ். இந்நிலையில் தான் வரும் அக்டோபரில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் டிவில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்தது.