
சூப்பர் 4 சுற்றில் நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்தியா 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ந்திய அணியின் தோல்விக்கு பந்துவீச்சு சற்று மோசமாக இருந்தது காரணமாக பார்க்கப்பட்டாலும், பேட்டிங்கும் கவலையளிக்கும் வகையில் தான் இருந்தது.
இந்திய அணியின் ஓப்பனிங் வீரர்கள் ரோஹித் சர்மா - கேஎல் குல் முதல் விக்கெட்டிற்கு 54 ரன்களை சேர்த்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் , ரிஷப் பண்ட் , ஹர்திக் பாண்ட்யா என அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். விராட் கோலி மட்டும் தனியாளாக அடித்த 60 ரன்கள் தான் இந்திய அணியை காப்பாற்றி கரைசேர்த்தது.
துபாய் களத்தில் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்துவதால், இடதுகை பேட்ஸ்மேன்கள் மிடில் ஓவர்களில் தேவை. அந்தவகையில் தினேஷ் கார்த்திக் போன்ற நல்ல ஃபார்மில் இருக்கக்கூடிய வீரரை ஓரம்கட்டிவிட்டு, இளம் வீரர் ரிஷப் பண்ட்-ஐ அணியில் சேர்த்தனர். பேட்டிங்கிற்கு பிட்ச் நன்றாக இருந்த போதும், அவர் டைமிங்கே இல்லாமல் மோசமான ஷாட்டை ஆடி அவுட்டானார். அவர் அவுட்டானது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக சென்றது. ரோகித் சர்மாவும் இதற்கு பண்ட்-ஐ ஓய்வறையில் திட்டிய வீடியோ இணையத்தில் வெளியானது.