
தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்றுநடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லபுஷாக்னேவின் அசத்தலான சதங்களால் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 392 ரன்கள் குவித்தன.
அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா 41.5 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளையும், ஆரோன் ஹார்டி, நாதன் எல்லீஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அண் 123 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளில் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.
இப்போட்டியில் சதமடித்த மார்னஸ் லபுஷாக்னே ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் போது ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் காயமடைய, அவருக்கு பதிலாக கன்கஷன் சப்ஸ்டிடியூட் முறையில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ந்தவர் மார்னஸ் லபுஷாக்னே. அப்போட்டியில் அற்புதமாக விளையாட, அவருக்கு அந்தத் தொடர் முழுக்க வாய்ப்பு கிடைத்து, ஆஸ்திரேலியா அணியின் ஒரு அங்கமாக மாறினார்.