
Not Maxwell, Aakash Chopra suggests most unique name to replace Kohli as RCB captain (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைகின்றன. அதனால் இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. ஏலம் வரும் பிப்ரவரி 12-13 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது.
ஏலத்திற்கு முன்பாக 8 பழைய அணிகளும் அதிகபட்சம் 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்துள்ளன. லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகளும் ஏலத்திற்கு முன்பாக தலா 3வீரர்களை வாங்கியுள்ளன.
இந்த மெகா ஏலத்தில் கலந்துகொள்ள 1,214 வீரர்கள் பெயர்களை கொடுத்துள்ளனர். சில பெரிய வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். ஆர்சிபி, கேகேஆர், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் புதிய கேப்டன்களை எதிர்நோக்கியிருக்கின்றனர்.