
சர்வதேச கிரிக்கெட் களத்தின் ரன் மெஷின் என அறியப்படுகிறார் விராட் கோலி. மூன்று ஃபார்மேட்டிலும் இவரது ரன் வேட்டை தொடர்ந்து வந்தது. இருந்தும் கடந்த சில ஆண்டுகளாக இவரது ஆட்டம் மங்கியது. அவர் எப்போது சதம் பதிவு செய்வார் என்ற கேள்வி எழுந்தது. அண்மையில் அவரது ஆட்டம் குறித்து நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கருத்துகள் வந்தன.
இந்தச் சூழலில்தான் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் அவர் அடுத்தடுத்த போட்டிகளில் 35 மற்றும் 59* ரன்களை சேர்த்துள்ளார். இதில் முதல் போட்டி பாகிஸ்தானுக்கு எதிராக அவர் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இன்சமாம் உல் ஹக், “இந்த இரண்டு போட்டிகளிலும் அவர் ஆடிய விதம் என்னை வெகுவாக கவர்ந்தது. அவர் கம்பேக் கொடுப்பதில் உறுதியாக உள்ளார். அவர் தனது கடினமான கட்டத்தில் இருந்து மீண்டு வருவது இந்திய அணிக்கும் நல்ல காலம். உலக அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அவர் ரன் சேர்க்க வேண்டும் மற்றும் ஃபார்மை தொடர வேண்டும் என விரும்புகிறார்கள்.