
"Nothing To Be Shocked...": Virat Kohli Opens Up About Quitting RCB Captaincy (Image Source: Google)
கடந்த வருடம் ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்து விலகிய விராட் கோலி, இந்திய டி20, டெஸ்ட் அணிகளின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்.
இந்நிலையில் ஆர்சிபி அணிக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி பேசுகையில், “என்னால் முடியும் என எண்ணுவதற்கும் அதிகமான பொறுப்புகளைக் கையாள மாட்டேன். என்னால் நிறைய செய்ய முடியும் எனத் தோன்றினாலும் அதன் வேலையில் என்னால் ஈடுபாடு காட்ட முடியவில்லையென்றால் அதைச் செய்ய மாட்டேன்.
உங்கள் சூழலில் இல்லாத ஒருவரால் உங்களுடைய முடிவுகளைப் புரிந்துகொள்ள முடியாது. வெளியே, மக்களுக்கென்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அவர்களிடம் நிலைமையை விளக்குவேன். என்னுடைய பணிச்சுமையை நான் கவனத்தில் கொள்ள வேண்டும்.