-mdl.jpg)
டி20 உலகக் கோப்பை தொடர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்தது.இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் அபாரமாக செயல்பட்டு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், அடுத்து அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக படுமோசமாக சொதப்பி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து சென்றுள்ளது. அங்கு இளம் இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், ஒருநாள் தொடர்களில் பங்கேற்க உள்ளது.இத்தொடரின் முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்தான நிலையில், இரண்டாவது போட்டி பே ஓவலில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச தீர்மானித்து, இந்திய அணியைப் பேட்டிங் செய்ய அழைத்தார். மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு இடமளிக்காதது பெரும் சர்ச்சையை கிளப்பியது.