
இந்தியா - நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 345 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 52 ரன்களும், ஜடேஜா 50 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான டாம் லதாம் 95 ரன்களும் வில் யங் 89 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியை பொறுத்தவரை அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை தொடர்ந்து இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இதில் முதல்வரிசை வீரர்கள் சொதப்பிய நிலையில் ஸ்ரேயஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.