முத்தரப்பு ஒருநாள் தொடர்: மீண்டும் அசத்திய பிரதிகா ராவல்; தென் ஆப்பிரிக்காவுக்கு 277 ரன்கள் டார்கெட்!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 276 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

முத்தரப்பு ஒருநாள் தொடர்: மீண்டும் அசத்திய பிரதிகா ராவல்; தென் ஆப்பிரிக்காவுக்கு 277 ரன்கள் டார்கெட் (Image Source: Google)
இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதிகா ராவல் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். பின் அவருடன் இணைந்த ஹர்லீன் தியோலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அதன்பின் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 78 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஹர்லீன் தியோலும் 29 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 41 ரன்னிலும், ரிச்சா கோஷ் 24 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
Also Read: LIVE Cricket Scoreஇருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களையும், காஷ்வி கௌதம் 5 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் இந்திய மகளிர் நி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 276 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தரப்பில் நோகுலுலேகோ மிலாபா 2 விக்கெட்டுகளையும், அயபோங்கா காக்கா, மசபடா கிளாஸ், நாடின் டி கிளர்க், அன்னேரி டெர்க்சன் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தினர்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News