Advertisement

எனது வாழ்க்கையை அவர்களால் வாழ முடியாது - விராட் கோலி!

"எனது உணர்வை அவர்களால் உணர முடியாது. எனது வாழ்வை அவர்களால் வாழ முடியாது" என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 11, 2022 • 20:05 PM
'Old McDonald Had A Farm, Virat Kohli Has Lost His Form'
'Old McDonald Had A Farm, Virat Kohli Has Lost His Form' (Image Source: Google)
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டை தனது பேட்டையாக மாற்றி, அதில் பேட் கொண்டு ஆட்சி செய்து வரும் அரசன் தான் இந்திய வீரர் விராட் கோலி. ஒருநாள், டி20, டெஸ்ட் என இந்தியாவுக்காக மொத்தம் 23,650 ரன்கள் எடுத்துள்ளார். அது தவிர ஐபிஎல் களத்தில் 6499 ரன்கள் சேர்த்துள்ளார். தனியொரு பேட்ஸ்மேன் பதிவு செய்த அதிகபட்ச ரன்கள் இது. 

அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் சாதனைகளுக்கான மைல் கற்களாக மாற்றி அமைப்பவர். நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக ரன் குவிக்க தடுமாறி வருகிறார்.

Trending


இந்நிலையில், அவரை பலரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர். முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என அவருக்கு ஆதரவாகவும், அவரது ஆட்டத்தை விமர்சித்தும் வருகின்றனர். '

இத்தகைய சூழலில் ஆர்சிபி அணிக்காக மிஸ்டர் நாக்ஸ் உடன் பேசியுள்ளார் கோலி. அதில் பேசிய அவர், "எனது உணர்வை அவர்களால் உணர முடியாது. எனது வாழ்வை அவர்களால் வாழ முடியாது. அவர்களால் அந்த தருணத்தை வாழ முடியாது. அதனால் இந்த இரைச்சலை எப்படி குறைக்க முடியும்? ஒன்று டிவியை மியூட் செய்துவிட வேண்டும் அல்லது அதனை நாம் கவனிக்க கூடாது. நான் இந்த இரண்டையும் செய்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement