
இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் முதன்மையானவராக எம் எஸ் தோனி பார்க்கப்பட்டு வருகிறார். இவரது தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்று அசத்தியது. பின் தோனி கேப்டன்சிப்பிலிருந்து வெளியேறிய பிறகு இந்திய அணி விளையாடிய 2 ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் அரையிறுதிச்சுற்றோடு வெளியேறியது.
அதிலும் குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மிகச்சிறப்பாக செயல்பட்ட பட்சத்திலும், அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். மேலும் அதுதான் மகேந்திர சிங் தோனியின் கடைசி சர்வதேச போட்டியாகவும் அமைந்தது. அதன்பின் அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாலம், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிகாக மட்டும் விளையாடிவருகிறார்.
அப்போதுதான் கடந்த 2020ஆம் ஆண்டு இதே நாள், இரவு 7 மணி போல் அந்த அதிர்ச்சி செய்தி தோனியிடம் இருந்து வந்தது. இன்ஸ்டாகிராமில் தோனி ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் என்னுடைய நன்றிகள். 7: 29 மணியிலிருந்து நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன் என்று கூலாக கூறி விட்டு சென்று விட்டார்.