
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த 6 போட்டிகளில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளைப் பெற்று சமனிலையுடன் இருந்தன. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று லாகூரில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பிலிப் சால்ட் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
பின் 18 ரன்களில் அலெக்ஸ் ஹேல்ஸ் விக்கெட்டை இழக்க, மறுமுனையிலிருந்த பிலிப் சால்ட்டும் 20 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் - பென் டக்கெட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.