
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 4-0 என்ற கணக்கில் தொடரை உறுதிசெய்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கராச்சியில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி ஆறுதல் வெற்றியைப் பெறும் முனைப்புடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக வில் யங் மற்றும் டாம் பிளெண்டல் இணை களமிறங்கினர். இதில் வில் யங் ஒருமுனையில் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடக்க, மறுமுனையில் களமிறங்கிய டாம் பிளெண்டல் 15 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து வந்த ஹென்றி நிகோலஸ் 23 ரன்களிலும் என ஆட்டமிழந்தார்.