
Pakistan Cricket Chief Ramiz Raja Sacked After England Drubbing (Image Source: Google)
பாகிஸ்தானில் 17ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரில் விளையாட வந்த இங்கிலாந்து அணி , 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் முதன்முறையாக ஒயிட்வாஷ் செய்து சாதனைப் படைத்தது.
இந்த படுதோல்வியின் காரணமாக பாகிஸ்தான் நிர்வாகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக செயல்பட்டு வந்த் ரமீஸ் ராஜாவை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியுள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) புதிய தலைவராக முன்னாள் பத்திரிகையாளர் நஜாம் சேத்தியை நியமிப்பதற்கும், தற்போதைய ரமிஸ் ராஜாவை நீக்குவதற்கும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.