
நடக்க இருக்கின்ற உலகக் கோப்பை தொடரில் வழக்கம் போல இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு எதிர்பார்ப்பு மிக எக்கச்சக்கமாக இருக்கிறது. உலகக் கோப்பை தொடருக்கான தேதிகள் முதலில் அறிவிக்கப்பட்ட பொழுது அக்டோபர் 15ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
பின்னர் குஜராத்தில் நவராத்திரி திருவிழா துவங்குகின்ற காரணத்தினால் அந்த குறிப்பிட்ட நாளில் பாதுகாப்பு தருவதில் சிக்கல் ஏற்படும் என்று, அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒரு நாள் முன்னதாகப் போட்டி மாற்றப்பட்டது.
மேலும் இந்திய அணி ஆசிய கோப்பையில் இந்த முறை பாகிஸ்தான அணியை 228 ரன்கள் என்கின்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி படுதோல்வியை கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக உலகக் கோப்பை இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானை விட இந்தியா வலிமையான அணி என பாகிஸ்தான் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வாகர் யூனிஸ் தெரிவித்துள்ளதுள்ளார்.