
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றியும், ஒரு தோல்வியையும் பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ளது.
இதில் அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து இருந்தது. ஆனால், அதை பாகிஸ்தான் வீரர்கள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட பெங்களூர் கிளம்பி வந்துள்ளது பாகிஸ்தான் அணி. வரும் அக்டோபர் 20 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது.
இந்நிலையில் பெங்களூரு வந்தவடைந்த பாகிஸ்தான் வீரர்களில் ஒருசிலருக்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபிக் மற்றும் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அஃப்ரிடி, கடந்த போட்டியில் அணியில் இடம் பெறாத உசாமா மிர் மற்றும் ஃபகர் ஸமான் ஆகிய நான்கு வீரர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது