
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது . இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்றது .
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது . துவக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட் இருக்கு 99 ரன்கள் சேர்த்தனர் 34 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்த ரிஸ்வான் ஆட்டம் இழந்தார் . கடந்த சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத பாபர் ஆசாம் இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி t20 சர்வதேச போட்டிகளில் தனது மூன்றாவது சதத்தையும், டி20 போட்டிகளில் தனது ஒன்பதாவது சத்தத்தையும் நிறைவு செய்தார் .
இவரது மிகச் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 192 கண்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது . 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 154 ரன்கள் மட்டுமே எடுத்து ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது . இதன் மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது டி20 போட்டியிலும் நியூசிலாந்து தோல்வியை தழுவியது . மிகச் சிறப்பாக பந்து வீசிய ஹாரிஸ் ரவுப் 27 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்